நயன்தாரா பிரபுதேவா திருமணம்

Thursday, April 21, 2011

READ MORE - நயன்தாரா பிரபுதேவா திருமணம்

நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் புரட்சி தலைவி ஜெயலலிதா

READ MORE - நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் புரட்சி தலைவி ஜெயலலிதா

யுவராஜ் - சச்சின் - சேவாக் யூகம் - கலக்குமா இந்தியா ? - இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத 7 அடுக்கு பாதுகாப்பு

Monday, March 28, 2011


இந்தியா பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே இடையே பெரும் எதிர் பரப்பை ஏற்படுத்தி உள்ளது . 2011  உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தினை காண இந்தியா,பாகிஸ்தான்   ‌தலைவர்கள் வருவதால்   தேசிய பாதுகாப்புப்ப‌டையினர் பஞ்சாப் மாநிலத்தை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
READ MORE - யுவராஜ் - சச்சின் - சேவாக் யூகம் - கலக்குமா இந்தியா ? - இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத 7 அடுக்கு பாதுகாப்பு

பலன் பல தரும் ஆஞ்சனேயர்

Sunday, March 27, 2011

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டி தெருவில் அமைந்துள்ளது திருவேங்கடமுடையான் கோவில். இதற்கு முன்பகுதியில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் ஸ்ரீபக்த ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் அமைந்த விதமே சற்று வித்தியாசமானது. பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களில் யாரோ ஒருவர் ஒரு சிறிய ஆஞ்சனேயர் சிலையை கோவிலின் முன்பகுதியில் வைத்துவிட்டுச் சென்று விட்டார். பெருமாளை வணங்க வரும் பக்தர்கள் அந்த ஆஞ்சனேயர் சிலைக்கும் கற்பூரம் ஏற்றி துளசி மாலை அணிவித்து வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்த சிலைக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று பக்தர்கள் மனதில் தோன்றியது. இதை கோவில் தர்மகர்த்தாவிடம் கூறி, அந்த இடத்திலேயே ஆஞ்சனேயருக்கு கோவில் கட்ட அனுமதி கேட்டனர். அவர் சிறிதும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தார்.

பிறகு கோவில் பணிகள் பக்தர்களது பொருளுதவியாலும் உழைப்பாலும் சிறப்புற துவங்கி மிக அற்புதமாக நிறைவேற்றப்பட்டது. விக்ரம் வருடம், சித்திரை மாதம் 28-ஆம் தேதி, புதன்கிழமையன்று ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா முன்னிலையில் வேத விற்பன்னர்களால் திரளான பக்தர்கள் சூழந்திருக்க சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவில் கட்ட ஆரம்பித்த நாள் முதல் முடியும் வரை தினமும் காலை முதல் மாலை வரை மாருதி ஒன்று எதிரில் உட்கார்ந்து ஆலயப் பணிகளைக் கவனித்த வண்ணம் இருந்தது ஆச்சரியமான விஷயம்! ஆஞ்சனேயரின் அருள் அனைவருக்கும் உண்டு; அவர் நம்மை எப்பொழுதும் கைவிடாமல் காப்பார் என்பதற்கு இது சான்றாகத் திகழ்கிறது.

இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் பிரார்த்தனைகள் எண்ணியபடி நிறைவேறுகிறது என்று உளமாரக் கூறுகிறார்கள். இந்த ஆஞ்சனேயருக்கு ஒன்பது வாரம் துளசி மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி வழிபட்டால் எல்லாவித நோய்களும் தீர்ந்துவிடுகிறது என்கிறார்கள் பக்தர்கள். அமாவாசையன்று பூஜையில் வைத்த செந்தூரக்கயிறை வாங்கி கையில் கட்டிச் செல்கின்றனர். இது எப்பொழுதும் நம்மை காக்கும் கவசமாகத் திகழ்கிறது.

இந்தக் கோவிலின் 12-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு விமரிசையாக நடைபெறவுள்ளது.
READ MORE - பலன் பல தரும் ஆஞ்சனேயர்

நடிகர் விஜய் ஜெயலலிதாவிற்கு ஆதரவு

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் 2011 சட்டமன்ற தேர்தலில் புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு  ஆதரவு தெரிவித்துள்ளது.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்காக திருச்சியில் தங்கியுள்ளார். அவரை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். மூன்றாவது தடவையாக ஜெயலலிதாவும் எஸ்.ஏ.சந்திர சேகரனும் சந்தித்து பேசுவது குறிப்பிடதக்கது.

செய்தியாளர்களை  எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திந்து பேசியதாவது:

விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யும்.   மக்கள் இயக்கத்தை  சார்ந்த அனைவரும்  அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள்.  இதை நான் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கிறேன்.எஸ்.ஏ.சந்திரசேகரன் திறந்த வேனில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்’’ என்று கூறினார்.

எது எப்படி இருந்தாலும், விஜய் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பது அவருடைய ரசிகர்ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

READ MORE - நடிகர் விஜய் ஜெயலலிதாவிற்கு ஆதரவு

ஆஸ்திரேலியாவை பழிக்கு பழி வாங்கியது இந்தியா - அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் மோதல்

Thursday, March 24, 2011

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்ற 2 வது கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
2003 உலககோப்பை கிரிக்கெட்  இறுதி போட்டியில் இந்தியா மோசமான ஆட்டத்தால் உலககோப்பை வாய்ப்பை நழுவவிட்டது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை, இந்தியா உலககோப்பை போட்டியில் தோற்கடித்து பழிக்கு பழி வாங்கியது  இந்தியா என்பது குறிபிடதக்கது.


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், அஸ்வின், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.சச்சின்,சேவாக் தொடக்க  ஆட்டம் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு குடுதல் பலம். யுவராஜ்  மற்றும் சுரேஷ்  ரைனா  ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு  இந்தியா உலககோப்பை  கண்டிப்பாக  வெல்லும் என்ற நம்பிக்கையை  அதிகரித்துள்ளது. கேப்டன் டோனி  தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் ரசிகர்களிடையே டோனி மீது உள்ள நம்பிக்கை குறைந்துவருகிறது.

அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் வருகிற மார்ச் 30 -ம் தேதி மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளது.
இந்தியா -பாகிஸ்தான் கடும் போட்டி நிலவும் என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர் பரப்பு எழுந்து வருகிறது .
READ MORE - ஆஸ்திரேலியாவை பழிக்கு பழி வாங்கியது இந்தியா - அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் மோதல்

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு மனைவி இன், எஸ்.வி.சேகர் அவுட்

Wednesday, March 23, 2011

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியினரிடம்  கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சிறுது காலம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் தாக்கல் செய்யும் விருப்ப மனுவை முதன் முதலாக எஸ்.வி.சேகர்-தான் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கொடுத்தார்.ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் எஸ்.வி.சேகர் பெயர் இடம்பெறவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தி தங்கபாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்
காங்கிரஸ் கட்சியில் அறிமுகம் இல்லாத நபர்கள் போட்டி இடுகிறார்கள் என்று அக்கட்சியை சார்ந்தவகர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளது குறிப்பிட தகுந்தது.


அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் அக்கட்சியின் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலர் ஆர். ராஜலட்சுமி போட்டியிடுகிறார்.
READ MORE - மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு மனைவி இன், எஸ்.வி.சேகர் அவுட்