மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு மனைவி இன், எஸ்.வி.சேகர் அவுட்

Wednesday, March 23, 2011

நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியினரிடம்  கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சிறுது காலம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் தாக்கல் செய்யும் விருப்ப மனுவை முதன் முதலாக எஸ்.வி.சேகர்-தான் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கொடுத்தார்.ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் எஸ்.வி.சேகர் பெயர் இடம்பெறவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தி தங்கபாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்
காங்கிரஸ் கட்சியில் அறிமுகம் இல்லாத நபர்கள் போட்டி இடுகிறார்கள் என்று அக்கட்சியை சார்ந்தவகர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளது குறிப்பிட தகுந்தது.


அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் அக்கட்சியின் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலர் ஆர். ராஜலட்சுமி போட்டியிடுகிறார்.

0 comments:

Post a Comment