ஆஸ்திரேலியாவை பழிக்கு பழி வாங்கியது இந்தியா - அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் மோதல்

Thursday, March 24, 2011

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்ற 2 வது கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
2003 உலககோப்பை கிரிக்கெட்  இறுதி போட்டியில் இந்தியா மோசமான ஆட்டத்தால் உலககோப்பை வாய்ப்பை நழுவவிட்டது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை, இந்தியா உலககோப்பை போட்டியில் தோற்கடித்து பழிக்கு பழி வாங்கியது  இந்தியா என்பது குறிபிடதக்கது.


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், அஸ்வின், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.சச்சின்,சேவாக் தொடக்க  ஆட்டம் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு குடுதல் பலம். யுவராஜ்  மற்றும் சுரேஷ்  ரைனா  ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு  இந்தியா உலககோப்பை  கண்டிப்பாக  வெல்லும் என்ற நம்பிக்கையை  அதிகரித்துள்ளது. கேப்டன் டோனி  தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் ரசிகர்களிடையே டோனி மீது உள்ள நம்பிக்கை குறைந்துவருகிறது.

அரை இறுதியில் இந்தியா -பாகிஸ்தான் வருகிற மார்ச் 30 -ம் தேதி மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளது.
இந்தியா -பாகிஸ்தான் கடும் போட்டி நிலவும் என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர் பரப்பு எழுந்து வருகிறது .

1 comments:

KTV WEEKLY NEWS said...

இந்தியா உலக கோப்பையை வெல்வது உறுதி...

Post a Comment