நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் புரட்சி தலைவி ஜெயலலிதா

Thursday, April 21, 2011



தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,அ.தி.மு.க.பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,‘’தமிழகத்தில் அண்மைக் காலமாக கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறியில் நாகராஜன் என்பவர், மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், மதுரை மாவட்டம் உச்சபரம்மேடு பகுதியில், டீ கடை நடத்தி வரும் சந்துரு என்பவர், கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரையில் மட்டும், கடந்த, 15 நாட்களில், ஏழு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில், கல்லூரி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை வேண்டும் என, சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் விஜய் ரசிகர்கள் இருந்தனர் என்பதற்காக, அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோவையில், தே.மு.தி.க., மாவட்டப் பொருளாளர் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில், சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment