நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். ஜெயம்ரவி, ஹன்சிகா மோட்வானி நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் இம்மாத இறுதியில் வெளிவருகிறது.இப்படம் வெளியானதும் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்க உள்ளன. திருமணத்தை மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. நயன்தாரா, பிரபுதேவா காதலுக்கு உதவிய பிரகாஷ்ராஜ் தனது இரண்டாம் திருமணத்தை மும்பையில் தான் நடத்தினார்.
பிரபுதேவாவும் மனைவி ரம்லத்தும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் ஒன்று சேர்ந்து இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதால் விவாகரத்து விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரம்லத்துக்கு பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை பிரபுதேவா எழுதி கொடுத்துள்ளார். நயன்தாராவை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று பிரபுதேவாவிடம் கேட்ட போது சிரித்தபடி பதில் சொல்லாமல் நழுவினார். எனது பிறந்த நாளை பெற்றோர் மற்றும் எனது அன்புக்குரிய ஒருவருடன் சேர்ந்து கொண்டாடப்போகிறேன் என்று கூறினார்.
சந்தோஷ் சிவன் இயக்கிவரும் உருமி படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபுதேவா. விஷாலை வைத்து பெயரிடப்படாத படமொன்றையும் இயக்கி வருகிறார்.
0 comments:
Post a Comment