அமைதிக்காக உலகம் சுற்றும் இந்திய வாலிபன்

Tuesday, March 15, 2011



உலக அமைதிக்காக  16 -வது  வயதிலிருந்து  தனது பயணத்தை சைக்கிளில் தொடங்கிய ரவி ,42 வயதிலும்  தனது பயணத்தை தற்போதும் மோட்டார் சைக்கிளில்  தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுவைரை சைக்கிளில் 1 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக... பைக்கில்  4 
லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்து கொண்டே இருக்கும் ரவி,சென்னையை சார்ந்தவர் என்பது தமிழகத்திற்கு பெருமை.

ஜப்பான்,ஆஸ்திரேலியா, சுவிட்சார்லந்து,பெல்ஜியம் ,ஹாலந்து,இத்தாலி ஆகிய வெளி நாடுகளில்  பயணம் மேற்கொண்ட ரவி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பைக் மூலம் சுற்றிவந்துள்ளார் என்பது குறிப்பிடதகுந்தது.

ரவி இதை பற்றி கூறும் போது,நான் புகழுக்காகவோ அல்லது சாதனைக்காகவோ இந்த பயணத்தை மேற் கொள்ளவில்லை.உலக அமைதிக்காக இதற்கு முன்பு பல தலைவர்கள் போராடியுள்ளனர்.அதேபோல் என்னால் முடிந்த ஒரு செயலை செய்கிறேன்.

0 comments:

Post a Comment